Wednesday, February 23, 2011

கமலக்கண்ணன் பாதகமலத்துக்கு ..

கமலக்கண்ணன் பாதகமலத்துக்கு ..
--------------------------------------------------------

                                                                                                                                                               

         கண்ணா! என் கவிதைக்குக் கருவாகி வா ;
         மன்னா! எந்நெஞ்சத்து மருள் நீக்க வா ;
         பொன்னே! என் வாழ்வுக்குப் பொருள் கூற வா;
         அன்பே! என் அஞ்ஞான  இருள் போக்க வா ;
          எந்நாளும் எனைக்காக்கும்  அரணாக வா !




    ஆதரிக்கப் பாஞ்சாலி அழைத்த வேளை
     மாதவாநீ  அவளுக்கு அளித்தாய் சீலை;
     ராதையுடன் செய்தாய் நீ ராஸ லீலை;
     கோதையும் உன்மேனிக்கிட்டாள் மாலை ..இந்த
     பேதைமேல்மட்டுமேன் இரக்கமில்லை? (கண்ணா...)



     நோக்கும் முகம் யாவும் நினதாகணும்;
    வாக்கெல்லாம் உனைவாழ்த்தும் துதியாகணும்;
    கேட்பதுந்தன் குழலொலியாகணும்;
    நீக்கமற நினைவெல்லாம் நீயாகணும்;..நெஞ்சில்
    பூக்கும் பாமலருன் பதம் சேரணும்.(கண்ணா..)
  





        

17 comments :

கோமதி அரசு said...

//நெஞ்சில்
பூக்கும் பாமலருன் பதம் சேரணும்.//
அன்று பூத்த மலரால் உன்னை அர்ச்சிப்பேன் கண்ணா
அன்பான மனதால் உன்னை அர்ச்சிப்பேன் கண்ணா
என்பது போல்,

நெஞ்சில் பூக்கும் பாமலரால் கண்னன் பாதம்
அர்ச்சிக்கிறீர்கள்.

அழகான பாடல்,அழகான படம்.
நன்றி லலிதா.

Radha said...

அழகான பாடல். :-)
அருமையான படங்கள். :-)

sury siva said...

super song
சூப்பர் சாங். அதுக்கு சூப்பரா ஒரு மெட்டு போடனம்னு ஷண்முகப்ரிய அல்லது தேஷ் ஏதாவது ஒண்ணிலே இன்னும் கொஞ்ச நேரத்துலே போடறேன். my வாயஸ் மட்டும் கொஞ்சம் மோசம் தான். அதுக்காக பாடாம இருக்க முடியுமோ ?
சுப்பு ரத்தினம்

குமரன் (Kumaran) said...

அருமை அம்மா!

sury siva said...

http://www.youtube.com/watch?v=tf5CozLW1Qs
கண்ணன் என் கவிதைக்கு கருவாகி வா !!
வந்து பாத்தேன். அந்த கிழவன் இங்கு பாடுவதும் கேட்டேன்.
மீனாட்சி பாட்டி.

Kavinaya said...

அழகான படங்களுடன் இனிமையான பாடல், அம்மா!

சி.பி.செந்தில்குமார் said...

m m நல்லாருக்கு

Lalitha Mittal said...

கோமதி,
சூரியனுக்கு தீபாராதனை
செய்வது போல்,அவனருளிய சொற்களால் அவனைப்பாடும் மனமருளிய மாயவனுக்கு நன்றி;அதை ரசிக்கும் உங்களுக்கும் நன்றி !

Lalitha Mittal said...

Type a word in phonetic English and hit space to get it in Tamil. Click on a word to see more options.
1)ராதா,உன் பின்னூட்டத்துக்கும் ,என்னை உங்கள் குழுவில் ஒருவராக ஏற்றதற்கும் மனமார்ந்த நன்றி !
2)குமரன்,
பாட்டை ரசித்தற்கு நன்றி
3)கவிநயா,
ராதாவின் உதவியால் படம் பதிக்கவும் ஓரளவு கற்றுக்கொண்டுவிட்டேன் !

உங்கள் வரவேற்புக்கும் உத்சாகமூட்டி உதவியதற்கும்
உளமார்ந்த நன்றிகள்!எல்லாம் அவன் செயல்!!

Lalitha Mittal said...

செந்தில்,
நான் ஒரு ம.ம[மரமண்டை
அதாவது ட்யூப்லைட்]
உன் ம்.ம் க்கு என்ன பொருள்?

Lalitha Mittal said...

சுரிசார் ,
நான்பாடக்கேட்டால் உங்களை நீங்கள் மகாராஜபுரம் என்று எண்ண
வாய்ப்புண்டு![ர.கணபதியின் 'விநாயகுனி'
என்ற கட்டுரை நினைவுக்கு வரது]பாட்டைக்கேட்டபின் மறுபடியும் உங்களை சந்திப்பேன்.
மீனாட்சிப்பாட்டிக்கும்
உங்களுக்கும் என் நன்றிகளும் நமஸ்காரங்களும் !

Anonymous said...

அருமையான கண்ணன் பட்டுகள். கண்ணன் மேலும் மேலும் அருளட்டும். அம்மா தனலட்சுமி

In Love With Krishna said...

ஹாய். இது உங்க கே கே.
தமிழ்-ல டைப்பிங்!
:))
எனக்கு march 2-இல் இருந்து exams.
எனக்காக கண்ணனிடம் வேண்டிகோங்க pleez!! :))

Lalitha Mittal said...

ஹாய் கேகே ,
கண்டிப்பா உனக்காக கண்ணனிடம் வேண்டிக்கறேன் .டென்ஷன்
இல்லாம படி .கண்ணன் அருள்வான் .

Lalitha Mittal said...

சுரிசார்
பாட்டு கேட்டேன் .நல்லா இருந்தது .

sury siva said...

சுரி சார் இல்லை. சூரி எனது பெயர். சுரி என்றால்கத்தி. ( knife or sword not shouting ) இல்லையென்றால்
சுப்பு ரத்தினம் என்று கூப்பிடுங்கள். இப்படித்தான் என் திருச்சி கல்லூரியில் 1957 ல் எனது ப்ரோபசர் ஏற்ஹார்ட் சூரிய நாராயணன் என்பதை சூரியனா அரையணா என்று படித்தது நினைவுக்கு வருகிறது.

சுப்பு ரத்தினம்.

Radha said...

கே.கே,
கவலை வேண்டாம். :-)
ஸ்ரீ ருக்மிணி சமேத பார்த்தசாரதி சுவாமி துணை. :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP